தமிழகத்தில் ஜூலை 12க்கு மேல் கூடுதல் தளர்வுகள்? பேருந்துகள் இயக்கம் அதிகரிப்பு!

0
தமிழகத்தில் ஜூலை 12க்கு மேல் கூடுதல் தளர்வுகள்? பேருந்துகள் இயக்கம் அதிகரிப்பு!
தமிழகத்தில் ஜூலை 12க்கு மேல் கூடுதல் தளர்வுகள்? பேருந்துகள் இயக்கம் அதிகரிப்பு!
தமிழகத்தில் ஜூலை 12க்கு மேல் கூடுதல் தளர்வுகள்? பேருந்துகள் இயக்கம் அதிகரிப்பு!

கொரோனா 2 ஆம் அலை தொற்றின் தாக்கமானது தமிழகம் முழுவதும் குறைந்து வருகின்ற நிலையில் பேருந்து சேவைகள் 50% பயணிகளுடன் இயங்கி வருகிறது. இவற்றில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஜூலை 12க்கு மேல் கூடுதல் பேருந்துகள் இயங்க அனுமதி கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பேருந்து சேவைகள்:

தமிழகத்தில் கொரோனா பரவலின் புதிய பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வருகிறது. தற்போது ஒரு நாளைக்கு சுமார் 3 ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தவிர ஒரு நாள் பலி எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. மேலும் மாவட்டங்கள் தோறும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் மாநிலம் முழுவதும் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளின் நிமித்தம் தமிழகம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

ஜூலை 16 முதல் பள்ளிகள் திறப்பு – ஹரியானா அரசு அறிவிப்பு!

இதற்கிடையில் திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கடலூர், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் சற்றே உயர்ந்துள்ளது. எனினும் மற்ற மாவட்டங்களில் நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இதுவரை 3.8% பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் 19% பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி – அமைச்சர் விளக்கம்!

இந்நிலையில் தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகள் வரும் ஜூலை 12 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அடுத்த கட்ட தளர்வுகள் அளிக்கப்படலாம் எனவும், அதில் 50% இருக்கை வசதிகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர கடைகள் செயல்படும் நேரங்களில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டால் 10 மணி வரை கூடுதல் இயக்க நேரம் கொடுக்கப்படலாம்.

நாடு முழுவதும் ஒரே நாளில் 1,206 பேர் உயிரிழப்பு – 42,766 பேருக்கு கொரோனா!

அதே நேரத்தில் உணவகங்கள், தேநீர் கடைகளில் 75% பேர் அனுமதி கிடைக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் கல்லூரிகள் துவங்கும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் சில வாரங்கள் கழித்து பள்ளிகள் திறக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையில் தற்போது செயல்பட்டு வரும் பேருந்து சேவைகளில், கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பேருந்து சேவைகள் இயக்கத்திற்கு அனுமதி கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!