நாடு முழுவதும் ஒரே நாளில் 1,206 பேர் உயிரிழப்பு – 42,766 பேருக்கு கொரோனா!
நாடு முழுவதும் கொரோனா பரவல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,766 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நிலைமையை சரி செய்ய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், அதன் காரணமாக நோய்த்தொற்று குறைந்துள்ளது. இந்நிலையில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.
ஜூலை 16 முதல் பள்ளிகள் திறப்பு – ஹரியானா அரசு அறிவிப்பு!
நேற்று நிலவரப்படி, ஒரே நாளில் கொரோனாவால் புதிதாக 42,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் இதுவரை நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,07,95,716 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் புதிதாக 1,206 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,07,145 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி – அமைச்சர் விளக்கம்!
நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் 45,254 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,99,33,538 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது மருத்துவமனைகளில் 4,55,033 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 42,90,41,970 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 37.21 கோடி தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் குணமடைந்தவர்கள் விகிதம் 97.20 சதவிகிதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.