தமிழகத்தில் 320 வனக்காப்பாளர் காலிப்பணியிடங்கள் – பணி நியமனம் எப்போது?
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட வனக்காப்பாளர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிக்கான நியமன ஆணை வழங்குவது குறித்து கேள்விகள் எழுந்துள்ளது.
பணி நியமன ஆணை:
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசு பணியாளர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். 320 வனக்காப்பாளர் பணிக்கு உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தொடங்கியது. இப்பணிக்கு மொத்தம் 67,000 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் வனக்காப்பாளர் பணிக்கான தேர்வு 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கினால் பணிக்கான மேற்படி நடவடிக்கைகள் முடக்கப்பட்டது. 2021 ஜனவரி மாதத்தில் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டது.
SBI வங்கி பண பரிமாற்றத்தில் புதிய வழிமுறைகள் – ஜூலை 1 முதல் அமல்!!
பிப்ரவரி மாதத்தில் தரவரிசை அடிப்படையிலான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பணியாளர் தேர்விற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தடைபட்டது. தேர்தல் முடிந்து திமுக தலைமையிலான புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையிலும் வனக்காப்பாளர் பணி நியமன ஆணைகள் வழங்குவது தொடர்பாக அறிவிப்புகள் ஏதும் வெளிவராமல் உள்ளது. புதிய ஆட்சியில் உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.