SBI வங்கி பண பரிமாற்றத்தில் புதிய வழிமுறைகள் – ஜூலை 1 முதல் அமல்!!
இந்தியாவின் வங்கி சேவைகளில் முன்னணியில் இருக்கும் ஸ்டேட் பேங்க் (SBI) பண பரிமாற்றத்தில் புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த நடைமுறைகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
SBI பண பரிமாற்றம்
இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது SBI வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பண பரிவர்த்தனையில் சில விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஜூலை 1ஆம் தேதி முதல் ஏடிஎம்மில் பணம் எடுப்பது, செக் புக் சேவைகள், பணம் அனுப்புவது போன்றவைகளுக்கு புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமல்படுத்தப்படவுள்ளன.
TN Job “FB Group” Join Now
முன்னதாக SBI வங்கியில் அடிப்படை சேமிப்புக் கணக்கு திறப்பதற்கு, வாடிக்கையாளர்கள் தங்களது KYC ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த சேமிப்பு கணக்குக்கு குறைந்தபட்ச இருப்புத்தொகை பூஜ்ஜியமாக கணக்கில் கொள்ளப்படும். சேமிப்பு கணக்கு டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. அதே போல எவ்வளவு பணம் வேண்டுமானாலும் ஒருவர் டெபாசிட் செய்து கொள்ளலாம். மேலும் இந்த சேமிப்பு கணக்குதாரர்களுக்கு ரூபே ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் ஜூன் 3 முதல் ‘வீடு தேடி வரும் ரேஷன்’ திட்டம் – பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!
இது தவிர SBI வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் தனது அடிப்படை சேமிப்பு கணக்கில் நான்கு முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளும் சலுகையையும் இவ்வங்கி வழங்குகிறது. இது தவிர ATM அல்லது வங்கி கிளை மூலமாகவோ பண பரிவர்த்தனை செய்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். SBI வாடிக்கையாளர், ஒரு ஆண்டில் 10 காசோலை தாள்கள் அடங்கிய காசோலை புத்தகத்துக்கு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். அதைத் தாண்டி பரிவர்த்தனை செய்தால் 40 ரூபாய் கட்டணம் மற்றும் GST வசூலிக்கப்படும். தவிர 25 காசோலைகள் அடங்கிய புத்தகத்தின் பரிவர்த்தனைக்கு 75 ரூபாய் வசூலிக்கப்படும்.
Sudhakar
Kokkeri