தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று (பிப்.4) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!

0
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று (பிப்.4) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - கனமழை எதிரொலி!
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று (பிப்.4) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - கனமழை எதிரொலி!
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று (பிப்.4) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. அதனால் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்பதால் இன்று (பிப்.4) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர் மழையால் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் உபயோகிப்போர் கவனத்திற்கு – விரைவில் புளூ டிக் கட்டணம் அமல்!!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மேலும் தற்போது வெளியான வானிலை அறிக்கையில் நாளை (பிப்.5) முதல் வரும் பிப்.7ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால் மக்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!