தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பு – அரசு வட்டாரங்கள் தகவல்!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுத்தேர்வு ரத்து:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தாக்கம் பரவி வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தது. இதனால் உயர் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
ஆனால் தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு தேர்வு நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கட்டாயம் நேரடி முறையில் தேர்வு நடைபெறும் என அதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டது. அதன்படி மே 3 ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கப்பட இருந்தது.
9, 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி – மாநில அரசு புதிய அறிவிப்பு!!
ஆனால் மே 2 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு உள்ளதால் மே 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் கொரோனா தாக்கம் கைமீறி விட்டதால் இந்த பேரிடர் காலத்தில் தேர்வுகள் நடத்தப்பட முடியாது என்பதால் பொதுத்தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்திலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.