9, 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி – மாநில அரசு புதிய அறிவிப்பு!!
ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதால் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்து செய்து மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று:
ஒடிசா மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. தேர்வுகள் நெருங்குவதால் மாணவர்கள் வகுப்புக்கு வருவது அவசியம் என்ற காரணத்தால் முதலில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8 முதல் பள்ளிகள் திறப்பதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அனுமதியளித்தார்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு? தலைமை செயலாளர் ஆலோசனை!!
பள்ளிகள் மூடல்:
ஒடிசா மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக மாநில கல்வித்துறை கடந்த மாதம் அறிவித்தது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தேர்வின்றி தேர்ச்சி:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒடிசா மாநிலம் முழுவதும் ஏப்ரல் 30ம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஒடிசா மாநிலத்தில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. மேலும், 2021 – 2022ம் கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கும் அரசு அனுமதியளித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்