தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு? தலைமை செயலாளர் ஆலோசனை!!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று தாக்கத்தின் காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவது குறித்து தமிழக தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த காரணத்தால் கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் செயல்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் கற்பிக்கப்பட்டது. கொரோனா தொற்றின் பரவல் கட்டுக்குள் வந்த காரணத்தால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டது.
பள்ளிகள் மூடல்:
மாணவர்கள் பள்ளியில் பொதுத்தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், மாநிலம் முழுவதும் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வுகள் மே 5ம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு ஒத்திவைப்பு:
12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நாளை முதல் தொடங்க உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் உச்சத்தில் உள்ளதால் மாணவர்கள் பாதிப்படைய அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள், சுகாதாரத்துறை, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆலோசனையில் எடுக்கப்படும் முடிவு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Please do not Postpone the exam
please Postponed the 12 th stateboard exam due to pandamic and students have somemore time to revise