தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண்கள் வழங்கும் முறை – அரசுக்கு பரிந்துரை!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்க அமைக்கப்பட்ட குழு 5 மதிப்பீட்டு முறைகளை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள்:
தமிழகத்தில் கொரோனா 2ம் அலை தாக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கும் நேரத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியது. அதனால் செய்முறை தேர்வுகள் முடிந்தவுடன் பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு மாணவர்களின் நலன் கருதி மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆன்லைன் வழியாகவே தொடர்ந்து பாடங்கள் நடந்த்தப்பட்டு வந்தது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. அதனால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. புதிய கல்வியாண்டு தொடங்கிய போதிலும் பள்ளிகள் திறப்பு கேள்விக் குறியாக உள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்று குறையாத காரணத்தால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது பாதுகாப்பானதாக இருக்காது எளிதாக மாணவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என கருதி அரசு 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது.
தமிழகத்தில் 2012 சான்றிதழ் சரிபார்ப்பு ஆசிரியர்களுக்கு பணி – அரசுக்கு கோரிக்கை!
மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதற்காக அரசு குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து ஆலோசனை வழங்க உத்தரவிட்டது. அதன் படி இந்த குழு 5 வகையான மதிப்பீட்டு வழிமுறைகளை அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.