தமிழகத்தில் 2012 சான்றிதழ் சரிபார்ப்பு ஆசிரியர்களுக்கு பணி – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் 2012 க்கு முன்பு வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு இல்லாமல் பணி நியமனம் செய்ய வேண்டும் என மாநில ஒருங்கிணைப்பாளர் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தகுதித்தேர்வு இல்லாமல் பணி நியமனம் :
தமிழகத்தில் 2012 க்கு முன்பு கலைஞர் ஆட்சியில் வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்த ஆசிரியர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 5:1 என்ற விகிதப்படி சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்காக ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மாவட்ட வாரியாக நடைபெற்றது. இதில் சுமார் 11,000 ஆசிரியர்கள் பணிக்காக காத்து கிடந்தனர்.
தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு பெற விண்ணப்பம் செய்தோர் கவனத்திற்கு!
அடுத்தடுத்த மத்திய, மாநில ஆட்சி மாற்றங்களால் வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்த பதிவு மூப்பு ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்யப்படவில்லை. தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்துள்ளது. இந்த பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்கும் திட்டம் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் நிறைவேற்றபடவில்லை. தற்போது மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி வந்துள்ளது. அதனால் ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி கிடைக்கும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் மின்தடை பிரச்சனை நீங்கும் – மின்வாரியம் உறுதி!
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக காத்திருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எந்தவித தகுதி தேர்வுகளும் இல்லாமல் அரசு பணி வழங்க வேண்டும். முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் கரங்களால் பெற்றிருக்க வேண்டிய பணி ஆணையை தற்போது முதல்வராக உள்ள கலைஞரின் புதல்வரான ஸ்டாலின் அவர்கள் கையால் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அரசு ஆசிரியர் பணி ஆணையை வழங்க வேண்டும் என மாநில ஒருங்கிணைப்பாளர் சின்னராசு முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.