தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – செய்முறை தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்!
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25ம் தேதி செய்முறைத் தேர்வு தொடங்கி மே மாதம் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்வுக்கான வழிமுறைகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
செய்முறை தேர்வு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்த பிறகு கடந்த 2021 செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு விடுமுறையும் அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் வேகமெடுக்க தொடங்கியது. அதனால் மாணவர்களின் நலன் கருதி ஜனவரி 31ம் தேதி வரை மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
TNPSC பொதுத்தமிழ் 2022 – தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..!
இதன் பிறகு அரசின் முயற்சியால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நேரத்தில் 10 மற்றும் 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. இதனையடுத்து பாட வாரியாக தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 25 முதல் மே 2 வரை செய்முறை தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்முறை தேர்வுக்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அறிவுரைகள்:
- ஒரு பெயர்பட்டியலில் காணப்படும் தேர்வர்கள், வெவ்வேறு செய்முறைத் தேர்வு மையங்களுக்குத் தொடர்பு உடையவர்களாக இருந்தால், பெயர்ப்பட்டியலை நகல் எடுத்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்குதல் வேண்டும்.
- செய்முறைத் தேர்வு முடிவுற்ற பின்னர் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலிருந்தும் செய்முறை மதிப்பெண் பட்டியல்களை 04.05.2022-க்குள் பெறவேண்டும்.
- அனைத்து பள்ளிகளிலிருந்து பள்ளி மாணவர்களது மதிப்பெண் பட்டியல் பெறப்பட்டவுடன் மாவட்டக் கல்வி அலுவலகம் மூலமாக பதிவேற்றம் செய்திடவேண்டும். இப்பணி 29.04.2022-ல் தொடங்கி 10.05.2022-க்குள் முடிக்கப்பட வேண்டும்.
- அறிவியல் செய்முறைத் தேர்வு மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யும் பணி முடிவுற்றவுடன், மதிப்பெண் பட்டியல்களை சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் உடன் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இறுதியாக இவர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சான்றிதழை பூர்த்தி செய்து மாவட்டக் கல்வி அலுவலரின் அலுவலக முத்திரையுடன் மாவட்டக் கல்வி அலுவலர் கையொப்பமிட்டு, அச்சான்றிதழை 12.05.2022-க்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.