புதுச்சேரியின் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக தமிழிசை சௌந்தரராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு என்ன காரணம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆளுநர் ராஜினாமா
தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் போட்டியிட இருப்பதால் இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ்- பா.ஜ.க கூட்டணி சார்பில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் போட்டியிடுவதாகவும் சமீபத்தில் அறிவுப்பு வெளியானது.
BSF எல்லைப் பாதுகாப்புப் படையில் 82 காலியிடங்கள் – ரூ.1,12,400/- மாத ஊதியம்!
தமிழகத்திலும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதனால் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். அவர் தூத்துக்குடி, புதுச்சேரி அல்லது கன்னியாகுமரி மக்களவை தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.