தமிழகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் 2021 – முதல்வர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் 2021 - முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் 2021 - முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் 2021 – முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ் பேரறிஞர்களை பாராட்டும் விதமாக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்

தமிழகத்தில் தமிழ் மொழியை போற்றி பாதுகாக்க குறைவான அளவில் தான் தமிழ்ப் பேரறிஞர்கள் இருக்கின்றனர். தமிழ் மொழிக்கும் தமிழ் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை தமிழ்ப் பேரறிஞர்களை சாரும். அதனால் இவர்களை பெருமைப்படுத்தும் விதமாக பல்வேறு விருதுகளை தமிழ்ப் பேரறிஞர்களுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும் இந்த விருதானது தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த ஆண்டு முதல் விருது பெறும் நபர் ஒன்றுக்கு விருது தொகையாக 200000 லட்ச ரூபாய் வரை வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

2022 IPL அணிகளுக்கு கேப்டனாகும் 3 வீரர்கள் ? தினேஷ் கார்த்திக் பரிந்துரை! ரசிகர்கள் விமர்சனம்!

கடந்த ஆண்டு விருது தொகையானது 100000 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுக்கு ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரை ஆகியவையும் வழங்கப்பட்டு பொன்னாடை அணிந்து சிறப்பிக்கபடுவார்கள். இந்த ஆண்டுக்கான விருது பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் 2021ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருதானது நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு வழங்க உள்ளது. இதையடுத்து மகாகவி பாரதியார் விருதானது பாரதி கிருஷ்ணகுமார் அவர்களுக்கும் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அத்துடன் புலவர் செந்தலை கவுதமன் அவர்களுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து சூர்யா சேவியர் அவர்களுக்கு சொல்லின் செல்வர் விருது வழங்கப்பட உள்ளது. இதையடுத்து சிங்காரவேலர் விருதானது கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்களுக்கும், கம்பர் விருது பாரதி பாஸ்கர் அவர்களுக்கும், ஜி.யு.போப் விருது ஏ.எஸ் பன்னீர்செல்வம் அவர்களுக்கும் மற்றும் பல தமிழ் பேரறிஞர்களுக்கும் விருதுகளை வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு விருதுகள் வழங்கி சிறப்பிப்பதால் தமிழ் பேரறிஞர்கள் மேலும் சிறப்பாக தமிழுக்கு தொண்டாற்றி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!