இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு:
இந்தியா முழுவதும் கொரோனா முதல் அலையின் தாக்கத்தை விட இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமாக இருந்தது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் அதிகரிக்கப்பட்டது. மேலும் முழு ஊடரங்குகள் அமல்படுத்தப்பட்டு தொற்று பாதித்த மாவட்டங்களில் முழு ஊடங்குகள் அமல்படுத்தப்பட்டு, அனைத்து நிறுவனங்களும் முடக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பொதுமக்கள் நலன் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது.
வங்கி ஊழியர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி அதிக அளவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதனால் மீண்டும் மூன்றாம் அலையின் துவக்கமாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகின்றன. இந்த வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து “இவாரா அறக்கட்டளை” என்ற அரசு சாரா அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு,நேற்று நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், சஞ்சீவ் கன்னா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் குறைந்த அளவே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் இது தொடர்பாக நிபுணர்கள், தொடர்புடையோரிடம் மத்திய சமூக நீதி அமைச்சகம் ஆலோசனைகள் கேட்க வேண்டும். அந்த ஆலோசனைப்படி, தேவையான மாற்றங்களை, சுகாதார அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் அதிகமான மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என அமர்வு கூறியுள்ளது.