தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்கும் -வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், இன்று (அக். 20) வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனால் மழை பெய்யும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
மழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் இன்னும் வடகிழக்கு பருவ மழை தொடங்கவில்லை என்றாலும், தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் இன்று (அக். 20) வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனால் இன்னும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இது குறித்து வெளியான அறிக்கையில், அந்தமான் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி இன்று (அக் 20) தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகி இருக்கிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகிற அக். 22 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில், இது புயலாக வலுப்பெறக்கூடிய வாய்ப்புள்ளதாகவும், தீவிர புயலாகவும், அதிதீவிர புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு சித்ராங் என பெயரிடப்பட்டுள்ளதாகவும், இதனால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் இருக்காது எனவும் 5 நாட்களுக்கு மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளது என வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.