தமிழகத்தில் ஜூலை 31 வரை கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஜூலை 31 வரை கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஜூலை 31 வரை கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஜூலை 31 வரை கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று மற்றும் அடுத்த மூன்று நாட்களுக்கு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், கடலோரப் பகுதியில் காற்று வேகமாக வீசும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை தகவல்:

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் லேசான மழைப்பொழிவும் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று ( 27.07.2022 ) தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும், தமிழகத்தை பொறுத்த வரைக்கும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம்‌, விருதுநகர்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, சிவகங்கை, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கிருஷ்ணகரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, கரூர்‌, நாமக்கல்‌, திருச்‌சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, பெரம்பலூர்‌ மற்றும்‌ அரியலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும் பெய்ய கூடும்.

Exams Daily Mobile App Download

அதுபோலவே நாளை (28.07.2022) அன்றும் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளின் ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம்‌, விருதுநகர்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, சிவகங்கை, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கிருஷ்ணகரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, கரூர்‌, நாமக்கல்‌, திருச்‌சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

மேலும், நாளை மறுநாள் (29.07.2022) அன்றும் தமிழ்நாடு, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளின் ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கிருஷ்ணகரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, கரூர் மற்றும் நாமக்கல்‌ மாவட்டங்களின் ஓரிரு இடங்களில்‌ கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அது போலவே (30.07.2022) அன்றும் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளின் ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும், கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை,திருவண்ணாமலை, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌ மற்றும்‌ திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

WhatsApp பயனாளர்களுக்குக்கான புதிய வசதி – நிறுவனம் அறிவிப்பு!

இதை தொடர்ந்து (31.07.2022) அன்றும் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளின் ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கரூர்‌, நாமக்கல்‌, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, பெரம்பலூர்‌, அரியலூர்‌, கடலூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளின் ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதனால் நகரின்‌ ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

27.07.2022: இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!