தமிழகத்தில் மார்ச் 9 வரை மிக கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தில் மார்ச் 9 வரை மிக கனமழை வெளுத்து வாங்கும் - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் மார்ச் 9 வரை மிக கனமழை வெளுத்து வாங்கும் - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் மார்ச் 9 வரை மிக கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

சென்னையில் இருந்து 270 கி.மீ. தூரத்தில் வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடித்து வருகிறது. அதனால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம்

தமிழகத்தில் நிலவும் வானிலை நிலவரத்தை பற்றி சென்னை வானிலை மையம் துல்லியமாக தகவல் தெரிவித்து வருகிறது. இதன் மூலமாக பேரிடர் காலத்தில் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ள முடிகிறது. அத்துடன் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வட தமிழக கடலோரத்தை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி தற்போது சென்னையில் இருந்து 270 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடித்து கொண்டு இருக்கிறது.

தமிழகத்தில் விதவைகளுக்கு ஓய்வூதியத்தொகை ரூ.800 ஆக உயர்வு – பயனாளிகள் மகிழ்ச்சி!

மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13கி.மீ வேகத்தில் நகரும் என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழ்நாட்டின் கரையை 36 மணி நேரத்தில் நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அத்துடன் டெல்டா மாவட்டங்கள்‌, புதுக்கோட்டை, கடலூர்‌, விழுப்புரம்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுள்ளது

தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஏப்ரல் மாதம் திருப்புதல் தேர்வுகள்!

அத்துடன் செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌, வடதமிழக மற்றும்‌ தெற்கு ஆந்திரா கடலோரப்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடை இடையே மணிக்கு 60 கிலோமீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌ என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து மார்ச் 9ம் தேதி வரை தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!