தமிழகத்தை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – கொட்டித் தீர்க்கப்போகும் மழை! வானிலை மையம் எச்சரிக்கை!
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் கடந்த வருடம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. இதனால் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. அதே போல் டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் பல ஏக்கர் நில பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. மேலும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் மழை வெள்ளத்தால் தங்கள் உடமைகளை இழந்தனர்.
TN TRB இளநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி போட்டித்தேர்வு ரத்து – அரசுக்கு முக்கிய கோரிக்கை!
அதன் பிறகு மழை பொழிவு குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்தநிலையில் புதிதாக 100 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணிநேரத்தில் இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரக் கூடும்.
TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – காலிப்பணியிடங்கள், பாடத்திட்டம் குறித்த விவரம் இதோ!
அதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மேலும் மார்ச் 5 மற்றும் 6-ம் தேதி தமிழ்நாட்டின் டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனால் மீனவர்கள் கடலுக்கு மேலான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.