தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் உள்தமிழக பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கிழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, காரைக்கால், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
மழைக்கு வாய்ப்பு:
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தொட்டுள்ளது. அக்னி நட்சத்திரம் போல் அனலடிக்க ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் வரும் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனால் இன்று முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மிதமானது முதல் லேசானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை தெரிவித்து உள்ளது.
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள் அமல்!
29.03.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
30.03.2022: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
30.03.2022, 31.03.2022: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும்.
01.04.2022: வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.