Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள் அமல்!

0
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள் அமல்!
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள் அமல்!
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள் அமல்!

இந்தியாவில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வர இருப்பதாக இந்திய தபால் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய விதிமுறைகள் குறித்த ஒரு தொகுப்பை கீழே பார்ப்போம்.

இந்திய தபால் நிறுவனம்:

போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்து இருப்பவர்கள் கவனத்திற்குக்காகவும், சேமிப்பு கணக்கை புதிதாக ஆரம்பிக்க உள்ளவர்கள் கட்டாயமாக இந்த தகவலை அறிந்து கொள்ளவும். வாடிக்கையாளர்களுக்கு பல திட்டங்களை வழங்கி வரும் போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என்று பிளான் வைத்து இருந்தால் அவர்களுக்கான ஒரு முக்கிய தகவல் கொண்ட தொகுப்பு தான் இது. சேமிப்பு கணக்கு இந்த கால கட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த வங்கியில் மட்டும் தான் சேமிப்பு கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்பது இல்லை. இந்நிலையில் தற்போது வரவுள்ள ஏப்ரல் மாத ஆரம்பத்தில் இருந்து போஸ்ட் ஆபீஸில் புதிய விதிமுறைகள் செயல்பட இருப்பதாக இந்திய அஞ்சல் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இது குறித்த ஒரு தொகுப்பை இங்கு காண்போம்.

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு!

போஸ்ட் ஆபீஸின் புதிய விதிமுறைகள் என்னவென்றால், 2022 ஏப்ரல் 1ஆம் தேதி முதல், தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் அஞ்சலக நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி ரொக்கமாக செலுத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் அலுவலக சேமிப்பு வட்டி கணக்கு வைத்திருப்பவரின் கணக்கில் அல்லது வங்கிக் கணக்கில் மட்டுமே அது இனி செலுத்தப்படும் என்றும், வட்டிப் பணத்தை மாதந்தோறும் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை எடுத்துக் கொண்டாலும், தபால் நிலையத்தின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்றும் அறிவித்து உள்ளது.

இது தவிர,போஸ்ட் ஆபீஸ் வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புத் திட்டத்துடன் வங்கி அல்லது அஞ்சலக சேமிப்புக் கணக்கை இணைக்கவில்லை என்றால், ஏப்ரல் 1 முதல் அவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம். எனவே, அனைத்து வாடிக்கையாளர்களும் மார்ச் 31 ஆம் தேதிக்கு முன் தபால் அலுவலக திட்டத்தை சேமிப்பு கணக்குடன் இணைக்க வேண்டும். மார்ச் 31 ஆம் தேதிக்குள் இரண்டு கணக்குகளையும் இணைக்கவில்லை என்றால், ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பிறகு பெறப்பட்ட வட்டி, தபால் அலுவலகத்தின் பல்வேறு அலுவலக கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!