பத்திரமா இருங்க… ஜூலை 17 வரை தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் ஜூலை 17ம் தேதி வரை கனமழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக (15.07.2021) (16.07.2021) ஆகிய தினங்களில் நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி , திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்களான புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சூப்பர் அறிவிப்பு… மாதம் ரூ.3000, வருடம் ரூ.36000 பென்ஷன் – பிஎம் கிசான் மந்தன் யோஜனா திட்டம்!
மேலும் (17.07.2021) நீலகிரி, கோயம்புத்தூர், தருமபுரி, சேலம்,வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களான புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அதே போல் (18.07.2021) (19.07.2021) ஆகிய தினங்களில் தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் போன்ற கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் கனமான மழையும் பெய்யக்கூடும். பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் (15.07.2021) (16.07.2021) (17.07.2021) (19.07.2021) ஆகிய தேதிகளில் தென் கிழக்கு வங்க கடல், தென்கிழக்கு அரபிக்கடல், தென்மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல், வடகிழக்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.