தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் தற்போது மழை பொழிவு பெரிதாக இல்லை வறண்ட வானிலையே நிலவி வருகிறது. ஆனால் வளிமண்டல சுழற்சி காரணமாக அவ்வப்போது லேசான மழை பொழிவு ஏற்படுகிறது. நேற்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை கடலூர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றின் வேகம் காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – IRCTC புதிய அறிமுகம்!
சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் தினசரி வானிலை குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய வானிலை குறித்த அறிக்கையை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்றைய வானிலை அறிக்கை பின்வருமாறு:
27.02.2022, 28.02.2022: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
01.03.2022: தென் வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
02.03.2022: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். தென்காசி, மதுரை, விருதுநகர் , திண்டுக்கல் ஆகிய இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.