தமிழகத்தின் இந்த 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தின் இந்த 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் இந்த 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் இந்த 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெப்ப நிலை சற்று அதிகரித்து காணப்படும் நிலையில் தமிழகம் தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் மழை ஏதும் இல்லாமல் சற்று வறண்ட வானிலையாக தான் உள்ளது. தற்போது பிப்ரவரி மதத்தின் இறுதி பகுதியை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், தற்போது சமீப நாட்களாக தமிழகம் முழுவதும் வெப்ப நிலை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் வர இருக்கும் கோடை காலத்தில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று காணப்படுகின்றது. இந்நிலையில், இன்றைய நிலவரப்படியான வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

கேரள கடலோர பகுதிகள்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல மேழடுக்கு சுழற்சியின்‌ காரணமாக,

20.02.2022: தென்‌ தமிழகம்‌ மற்றும்‌ திருப்பூர்‌, கோயம்புத்தூர்‌, நீலகிரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌.

21.02.2022: தென்‌ தமிழகம்‌ மற்றும்‌ வட தமிழக உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌.

அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – ரூ.63000 வரை சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

22.02.2022: தென்‌ தமிழக மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

23.02.2022: தென்‌ தமிழகம்‌, திருப்பூர்‌, கோயம்புத்தூர்‌, நீலகிரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

24.02.2022: தென்‌ தமிழகம்‌ மற்றும்‌ திருப்பூர்‌, கோயம்புத்தூர்‌, நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை,

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. காலை வேளையில்‌ லேசான பனி மூட்டம்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு – அடுத்த நிதியாண்டில் திட்டம்!

அடுத்த 48 மணி நேரத்ததிற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌.

அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

கடந்த 24 மணி நேரத்தில்‌ பொதுவான மழை அளவு (சென்டிமீட்டரில்‌): ஏதுமில்லை.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!