தமிழகத்தில் ஜன.2 வரை மழைக்கு வாய்ப்பு, மூடுபனி எச்சரிக்கை – வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தில் ஜன.2 வரை மழைக்கு வாய்ப்பு, மூடுபனி எச்சரிக்கை - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் ஜன.2 வரை மழைக்கு வாய்ப்பு, மூடுபனி எச்சரிக்கை - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் ஜன.2 வரை மழைக்கு வாய்ப்பு, மூடுபனி எச்சரிக்கை – வானிலை மையம் அறிக்கை!

தமிழக கடற்கரையை நோக்க நகரும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இடியுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்‌

கடந்த நவம்பர் மாதம் வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அதிக கனமழை பெய்தது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாய் காட்சியளித்தது.

ஜனவரி 1ம் தேதி முதல் அங்கன்வாடிகள் திறப்பு – அரசு அதிரடி உத்தரவு!

அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பிறகு படிப்படியாக மழை குறைய ஆரம்பித்தும் இயல்பு நிலை திரும்பியது. தற்போது மழை இன்றி அதிக பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்றைய வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது.

வானிலை அறிக்கை:

29.12.2021: கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

30.12.2021: கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடியுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசுத்தொகை – அரசுக்கு கோரிக்கை!

31.12.2021: கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடியுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

01.01.2022: கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடியுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இலேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

02.01.2022: தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடியுடன்‌ கூடிய இலேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மூடுபனி எச்சரிக்கை:

29.12.2021, 30.12.2021: மேற்கு தொடர்ச்‌சி மலையை ஓட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய பகுதிகளில்‌ லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இலேசான மமை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்‌சயஸை ஒட்டி இருக்கும்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!