தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசுத்தொகை – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் சேர்த்து பரிசுத் தொகையாக ரூ.5,000 வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
பொங்கல் பரிசுத்தொகை:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பரிசுத் தொகுப்பினை அறிவித்துள்ளது. அந்த பரிசுத் தொகுப்பில் பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் உள்ளிட்ட பொருட்கள் மேலும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகிய மளிகை பொருட்கள் மற்றும் முழு கரும்பும் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை வழங்கப்படும்.
ஜனவரி 1ம் தேதி முதல் அங்கன்வாடிகள் திறப்பு – அரசு அதிரடி உத்தரவு!
தற்போது அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப்பணம் குறித்த எந்த அறிவிப்புகளும் இடம் பெறவில்லை. இது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பொங்கல் பரிசுத் தொகையாக 5 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. ஆனால் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் ரொக்க பணம் என்ற வார்த்தை நீக்கப்பட்டு பரிசுத்தொகுப்பு என்பது மட்டுமே இடம் பெற்றுள்ளது. இதையடுத்து பரிசுத் தொகை கிடையாது என்று உறுதியானது.
Jio சிம் பயனர்களுக்கு அதிரடி ஆபர் – புதிய டேட்டா திட்டங்கள்! முழு விபரம் இதோ!
இந்த நிலையில் உணவு வழங்கல் துறை அமைச்சரிடம் பொங்கல் பரிசுத் தொகை குறித்து கேட்ட போது, ரொக்க பணம் குறித்து முதல்வர் அறிவிப்பார் என்று தெரிவித்தார். இதனால் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். தற்போது பொங்கல் பண்டிகைக்கு பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக நிதிநிலை நெருக்கடியான சூழலில் உள்ளது. அதனால் மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று 5 ஆயிரம் ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.