ஜனவரி 1ம் தேதி முதல் அங்கன்வாடிகள் திறப்பு – அரசு அதிரடி உத்தரவு!

0
ஜனவரி 1ம் தேதி முதல் அங்கன்வாடிகள் திறப்பு - அரசு அதிரடி உத்தரவு!
ஜனவரி 1ம் தேதி முதல் அங்கன்வாடிகள் திறப்பு - அரசு அதிரடி உத்தரவு!
ஜனவரி 1ம் தேதி முதல் அங்கன்வாடிகள் திறப்பு – அரசு அதிரடி உத்தரவு!

கேரள மாநிலத்தில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்கள் புதிய வழிகாட்டுதல்களின் படி செயல்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ஊழியர்களும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி திறப்பு:

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் குழந்தைகள் முதல் வகுப்பு பள்ளிக்கு செய்வதற்கு முன்னதாக அவர்களுக்கு அடிப்படை விஷயங்களையும், கற்றல் அடிப்படைகளையும் கற்பிக்கும் படி உருவாக்கப்பட்டது தான் அங்கன்வாடி மையங்கள். இதன் மூலம் பணிக்கு செல்லும் பெண்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக விட்டு செல்ல முடியும். கடந்த 2020ம் ஆண்டு முதல் தோன்றிய கொரோனா தொற்றின் பரவல் காரணமாக அனைத்து அங்கன்வாடி மையங்களும் குழந்தைகளின் நலன் கருதி மூடப்பட்டது. தொடர்ந்து கொரோனா 2ம் அலை பாதிப்புகளும் அதிகரித்து வந்த காரணத்தால் அவை செயல்படாமல் இருந்து வருகிறது.

Jio சிம் பயனர்களுக்கு அதிரடி ஆபர் – புதிய டேட்டா திட்டங்கள்! முழு விபரம் இதோ!

மாணவர்களுக்கு அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் சத்துணவு பொருட்கள் அனைத்தும் உலர் ரேஷன் பொருட்களாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்றின் பரவல் குறைந்து வரும் சூழ்நிலையில், அனைத்து அரசுகளும் தீவிர ஆலோசனைக்கு பின்னர் கல்வி நிலையங்களை படிப்படியாக திறந்து வருகிறது. இந்நிலையில், கேரளா மாநிலத்தில் உள்ள அங்கன்வாடிகள் ஜனவரி 1ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி, முதல் கட்டமாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளது.

Post Office இல் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

அங்கன்வாடிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் அனைத்து அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கண்டிப்பாக முழுமையாக தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். காலை 9.30 முதல் 12.30 வரை அங்கன்வாடிகள் செயல்படும்.மேலும், சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்படும். அங்கன்வாடிகளுக்குள் பெற்றோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாணவர்கள் 1.5 மீட்டர் இடைவெளியில் அமர வேண்டும். 15 குழந்தைகளுக்கு மேல் உள்ள அங்கன்வாடிகளில் பெற்றோரின் ஆலோசனையின் படி, மாணவர்களுக்கு வகுப்புகள் தனித்தனியாக நடத்தப்பட உள்ளது என்றும் அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!