தமிழகத்தில் டிச.26ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் – ஆய்வு மையம் அறிக்கை!

0
தமிழகத்தில் டிச.26ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் - ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தில் டிச.26ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் - ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தில் டிச.26ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் – ஆய்வு மையம் அறிக்கை!

இன்னும் 4 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌ என்றும் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்‌

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பல்வேறு இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வந்தது. தற்போது தமிழகத்தில் மழையின் அளவு குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று முதல் இன்னும் 4 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும். அத்துடன் வருகிற டிச.26 வரையிலான வானிலை நிலவரத்தை சென்னை வானிலை மையம் இன்று அறிவித்துள்ளது.

22.12.2021 முதல்‌ 26.12.2021 வரை: தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

வெப்பநிலை எச்சரிக்கை

22.12.2021 முதல்‌ 24.12.2021 வரை: தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு வெப்பநிலையை ஓட்டியே காணப்படும்‌.

Post office இல் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – டிஜிட்டல் கணக்கை எப்படி தொடங்குவது?

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ தெளிவாக காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

கடந்த 24 மணி நேரத்தில்‌ தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலையே நிலவியது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!