Post office இல் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – டிஜிட்டல் கணக்கை எப்படி தொடங்குவது?
தற்போது Post office-ல் பல்வேறு சேமிப்பு திட்டங்களையும் அதனை தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை அஞ்சல் துறை அறிவித்து வருகிறது. அத்துடன் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு புதிய வழிகாட்டுதலை அறிவித்துள்ளது.
டிஜிட்டல் கணக்கு
கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வந்தனர். இதனால் தற்போது பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்த தொடங்கினர். இதையடுத்து அஞ்சல் அலுவலகத்தில் வங்கியை காட்டிலும் சேமிப்பு திட்டங்களில் அதிக பலன் கிடைக்கிறது. தற்போது அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களையும் அதனை தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை அறிவித்து வருகிறது. தற்போது செல்வ மகள் சேமிப்பு திட்டம் மற்றும் பிபிஎஃப் திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
தமிழக அரசின் வட்டாரக்கல்வி அதிகாரிகள் கவனத்திற்கு – பணி மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு!
இதனை பெற முதலில் டிஜிட்டல் கணக்கிற்கு பதிவு செய்திருக்க வேண்டும். இந்த டிஜிட்டல் கணக்கை தொடங்க 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அத்துடன் இதற்கு குறைந்தபட்ச தொகையை வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. இந்த கணக்கை செயல்படுவதற்கு KYC செயல்முறைகளை 12 மாதங்களுக்குள் முடித்திருக்க வேண்டும். மேலும் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை வைப்புத்தொகையாக வைத்து கொள்ளலாம். சேமிப்புக் கணக்காக டிஜிட்டல் சேமிப்புக் கணக்கை மாற்ற முடியும் அத்துடன் இந்த கணக்கை போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்குடன் இணைக்கவும் முடியும்.
டிஜிட்டல் கணக்கை தொடங்குவதற்கான வழிமுறைகளை பற்றி காண்போம். முதலில் டிஜிட்டல் கணக்கை தொடங்க பிளே ஸ்டோருக்குச் சென்று IPPB மொபைல் பேங்கிங் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் ‘உங்கள் கணக்கைத் திறக்கவும்’ என்பதை கிளிக் செய்து மொபைல் எண், பான் எண் போன்றவற்றை உள்ளீடாக கொடுத்து பின் ‘தொடரவும்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது மொபைல் எண்ணிற்கு SMS மூலம் OTP அனுப்பப்படும். அந்த OTP எண்ணை உள்ளிட்டு ஆதாரில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும் அல்லது ஆதார் எண் அல்லது ஆதார் விர்ச்சுவல் ஐடியை உள்ளிட வேண்டும்.
அடுத்ததாக செக்பாக்ஸ்-ல் டிக் செய்து ‘சமர்ப்பி’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது மொபைல் எண்ணிற்கு SMS மூலம் OTP அனுப்பப்படும். அந்த OTP எண்ணை உள்ளிட்டு ‘தனிப்பட்ட தகவல்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் தகவல்களை உள்ளிட்டு ‘சேமி’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து ‘PAN & Communication Address’ என்பதைக் கிளிக் செய்து, விவசாயம் அல்லாத வருமானம், விவசாய வருமானம் மற்றும் குறிப்புகள் ஏதேனும் இருந்தால் உள்ளிட வேண்டும். அதற்கு அடுத்து ‘சேமி’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதற்கு அடுத்த பக்கத்தில் நாமினி விவரங்களை உள்ளிட வேண்டும்.
அதிகரிக்கும் ஓமைக்ரான் தொற்று – மீண்டும் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கு! பொதுமக்கள் அச்சம்!
அதையடுத்து ‘கூடுதல் தகவல்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் திருமண நிலை, தொழில், மொத்த ஆண்டு வருமானம், கல்வித் தகுதி, போன்ற தகவல்களை உள்ளிட்டு ‘சேவ்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘கணக்கு தகவல்’ என்பதைக் கிளிக் செய்து கணக்கு அறிக்கையை வழங்குவதற்கான முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் மற்றும் ஆதார் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது ‘செக்பாக்ஸில்’-ல் டிக் செய்து ‘சேவ்’ செய்ய வேண்டும். அதன் பின் ‘தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்து மேலே குறிப்பிட்ட விவரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும். இப்பொழுது மொபைல் எண்ணிற்கு SMS மூலம் OTP அனுப்பப்படும் அதை உள்ளிட வேண்டும். டிஜிட்டல் சேமிப்பு வங்கி கணக்கு தற்பொழுது திறக்கப்படும்.