தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இம்மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இம்மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இம்மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இம்மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை அறிக்கை!

கிழக்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்‌:

கடந்த நவம்பர் மாதம் வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்தது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக சென்னையில் மழைநீர் தேங்க மாற்று வெள்ளக்காடாய் காட்சியளித்தது. அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பிறகு படிப்படியாக மழை குறைய ஆரம்பித்து தற்போது அதிக பனிப்பொழிவு நிலவி வருகிறது. தினசரி சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை குறித்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய வானிலை அறிக்கை பின்வருமாறு

28.12.2021, 29.12.2021: கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

ரூ.15 கோடி செலவில் பிரதமர் மோடிக்கு பென்ஸ் கார் – பிரமிக்க வைக்கும் வசதிகள்! பாதுகாப்பு அம்சங்கள்!

30.12.2021: கடலோர மாவட்டங்கள்‌, மற்றும்‌ அதனை ஓட்டிய உள்மாவட்டங்கள்‌, புதுவை, காரைக்கால்‌ பகுஇகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இலேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

31.12.2021, 01.01.2022: தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுஇகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய இலேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மூடுபனி எச்சரிக்கை:

28.12.2021, 29.12.2021: மேற்கு தொடர்ச்‌சி மலையை ஓட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ ஏனைய உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான பனி மூட்டம்‌ காணப்படும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இலேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

சென்னையில் தனியார் நிறுவன பணிகள் – டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!

கடந்த 24 மணி நேரத்தில்‌ தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலையே நிலவியது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!