தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
வட கிழக்கு பருவ காற்றின் காரணமாக தமிழகத்தில் டிசம்பர் 14ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
12.12.2021, 13.12.2021, 14.12.2021: கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க கொரோனா தடுப்பூசி கட்டாயம் – அறிவிப்பு வாபஸ்!
15.12.2021, 16.12.2021: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும்,வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கும்.