தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன்‌ மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன்‌ மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன்‌ மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன்‌ மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

தமிழகத்தில் உள்‌ தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கிழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக, காரைக்கால், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய இலேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

மழைக்கு வாய்ப்பு:

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திர காலம் இப்போதே ஆரம்பித்து விட்டது போல அனலடிக்க ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் மே, ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதால், மக்களின் கவலை அதிகரித்துள்ளது. ஆனால் இன்று முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை தென்‌ தமிழகம்‌ மற்றும்‌ மேற்கு தொடர்ச்‌சி மலைப்‌ பகுதி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை தெரிவித்து உள்ளது.

WIPRO முதல் BHU நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விவரம் இதோ!

05.04.2022: தென்‌ தமிழகம்‌ மற்றும்‌ மேற்கு தொடர்ச்‌சி மலைப்‌பகுதி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான முதல்‌ மிதமான மழை பெய்யக் கூடும்‌.

06.04.2022: உள்‌ தமிழக மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

07.04.2022 முதல்‌ 09.04.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கு எச்சரிக்கை :

05.04.2022, 06.04.2022: தெற்கு அந்தமான்‌ கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!