வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 03.04.2022 முதல் 06.04.2022 வரை உள்ள தேதிகளில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வானிலை ஆய்வு மையம்:
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக எந்தெந்த இடங்களில் மழை பெய்யும் என்பது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, இன்று
02.04.2022: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
IPL 2022 MI Vs RR: ட்ரீம்11 கணிப்பு, பேண்டஸி கிரிக்கெட் டிப்ஸ் & பிளேயிங் லெவன் – ஒரு அலசல்!
03.04.2022 முதல் 06.04.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வெப்பநிலையாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி செல்சியஸ் முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். அடுத்தாக, சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
இது தவிர கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவையும் தெரிவித்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு சென்டிமீட்டர், பர்லியார் (நீலகிரி) 2, மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), குன்னூர் (நீலகிரி), குன்னூர் பிடிஓ (நீலகிரி), தாளவாடி (ஈரோடு) தலா 1. மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.