தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது எப்போது? இன்று மாலை ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தியேட்டர்கள் திறப்பது குறித்து இன்று மாலை தியேட்டர் உரிமையாளர்கள் காணொளி மூலமாக ஆலோசனை நடத்த உள்ளனர்.
தியேட்டர்கள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. அதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. குறிப்பாக ஓராண்டாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் திரையரங்குகளும் 100 நாட்களுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ளன.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (TC) வழங்கல் – உயர்நீதிமன்றம் உத்தரவு!
இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. மேலும் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இதனால் திரையரங்குகளை கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை பின்பற்றி திறக்கவும், அல்லது 50 % பார்வையாளர்களுடன் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என பல முறை தியேட்டர் உரிமையாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் திரையரங்குகள் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் தமிழக அரசு வெளியிடாத நிலையில், இன்று மாலை தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பது குறித்து இன்று மாலை தியேட்டர் உரிமையாளர்கள் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் 100 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் தியேட்டர்கள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.