தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு – முக்கிய கோரிக்கை! அரசின் முடிவு என்ன?
தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் சிபிஎஸ்இ மற்றும் நர்சரி மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் அரசை வலியுறுத்துகின்றனர்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கடந்த வருடம் பரவிய கொரோனா பெருந்தொற்று தாக்கத்தால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்களுக்கு அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும், ஆன்லைன் வாயிலாகவும் தினசரி பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பூசிகளின் பயன்பட்டால் குறைய தொடங்கியதும் 2021 -2022ம் கல்வியாண்டில் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது.
IPL 2022: அகமதாபாத் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் – ரசிகர்கள் உற்சாகம்!
அதனை தொடர்ந்து 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் தொற்று தீவிரமெடுத்த காரணத்தால் மாணவர்களின் நலன் கருதி முதலில் 1 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால் அம் மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ம் தேடி வரை நீட்டிக்கப்பட்டதால் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் எச்சரிக்கை!
தற்போது தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ , நர்சரி மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த கோரிக்கையை அரசிடம் வலியுத்த தயாராகி வருகின்றனர். மேலும் உரிய பாதுகாப்பு வசதிகள் பள்ளிகளில் ஏற்பாடு உள்ளது.15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளி மாநில பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.