தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம், “கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு தொற்று பாதிப்பு அதிகரித்து உயிரிழப்பு” ஏற்படுவதாக பேட்டி அளித்துள்ளார்.
அமைச்சர் எச்சரிக்கை அறிவிப்பு:
தமிழகம் முழுவதும் கொரோனா மூன்றாம் அலை தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளான மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளி ஆகியவைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் தவறாமல் வாரந்தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசிகளை எவ்வித அச்சமின்றி போட்டு வருகின்றனர்.
மாநில அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 62 ஆக உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்!
இதனை தொடர்ந்து சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்ட பின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் விவரங்களை செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் முதல் டோஸ் 89 % பேரும், இரண்டாம் டோஸ் 65 % பேரும் செலுத்தி உள்ளனர். அந்த வகையில் சென்னையில் மற்றும் 94.19% பேர் முதல் டோஸ் மற்றும் 74.11% பேர் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் HRA தொகை? முழு விவரங்கள் இதோ!
இதனை தொடர்ந்து 21 மாநகராட்சியில்100% தடுப்பூசி திட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும் மற்றும் 2,580 ஊராட்சிகளில் 100% ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சென்னையில் 38,850 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது என்று குறிப்பிட்டார். மேலும் 1,71,616 சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி இதுவரை போட்டுக் கொள்ளாதவர்கள் தான் அதிக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இன்று தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது மற்றும் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.