IPL 2022: அகமதாபாத் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் – ரசிகர்கள் உற்சாகம்!

0
IPL 2022: அகமதாபாத் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் - ரசிகர்கள் உற்சாகம்!
IPL 2022: அகமதாபாத் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் - ரசிகர்கள் உற்சாகம்!
IPL 2022: அகமதாபாத் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் – ரசிகர்கள் உற்சாகம்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அடுத்து வரும் ஐபிஎல் சீசனில் அகமதாபாத் அணிக்காக விளையாட உள்ளார். இதைதொடர்ந்து அகமதாபாத் அணிக்காக ரஷித் கான் மற்றும் கில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

IPL 2022:

IPL ஏலம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடக்க உள்ளதாக BCCI யிடம் இருந்து தகவல் வெளியானது. கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த ஆண்டு IPL போட்டிகள் துபாயில் நடைபெற்றது. அதேபோல் இந்த ஆண்டுக்கான IPL அணிகளின் ஏலமும் துபையில் நடந்தது. ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறவிருந்த IPL ஏலம் ஒரு மாதம் காலம் ஒத்திவைத்து பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. ஏலத்தில் எந்த அணி எந்த வீரரை எடுக்கப் போவது என ரசிகர்களிடம் ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் எச்சரிக்கை!

தற்போது நடக்கப்போகும் IPL தொடரில் லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் சேர்க்க உள்ளன. சமீபத்தில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைக்கப் போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. 2 புதிய அணிகளும் வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது புதிதாக விளையாடும் அகமதுபாத் அணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாக அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த IPL தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கான விளையாடிய ரஷித் கான் மற்றும் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுக்மான் கில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 62 ஆக உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்!

அகமதாபாத் அணி பாண்டியவை 15 கோடிக்கும் , ஷித் கான் மற்றும் கில் இருவரையும் தலா 8 கோடிக்கும் ஏலம் எடுத்துள்ளது. மேலும் அகமதாபாத் அணிக்கு ஹெட் கோச்சாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெக்ரா நியமிக்கப்பட்டுள்ளார். ஆஷிஷ் நெக்ரா இதற்கு முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஹெட் கோச்சாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை அணியில் தக்க வைக்காமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. தற்போது அகமதுபாத் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதால் பாண்டியா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!