தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி – வெளியான தகவல்!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக, ஏகப்பட்ட மக்கள் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல்:
தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட ஏகப்பட்ட நோய்கள் மக்களை அதிகம் பாதித்து வருகிறது. மேலும் அரசு இது குறித்து பல தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்ற வாரம் தமிழகத்தில் 1000 இலவச காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. காய்ச்சல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் முகாமில் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பல தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியை அரசு எடுத்து வருகிறது. காய்ச்சல் அதிகமாக இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பருவ நிலை மாற்றத்தால் இது போல காய்ச்சல் வருவது பொதுவானது தான் என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் காய்ச்சல் சளி அறிகுறிகளுடன் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN TRB PG Assistant தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் டெங்கு நோய் தொற்று மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு இன்று டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர் சென்னை ஆழ்வார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்