தமிழக காவல்துறையின் புதிய எச்சரிக்கை அறிவிப்பு – பிரதமர் வருகை எதிரொலி!
சென்னையில் நாளை (ஜூலை 28 ) 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க உள்ள நிலையில் காவல்துறை அதிகாரி அனைவர்க்கும் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றினை விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி வருகை :
இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. அதுவும் தமிழகத்தில் சென்னை மாநகரத்தில் உள்ள மாமல்லபுரத்தில் 44 வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியின் விழாவை துவக்கி வைக்கும் வண்ணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். மேலும் இந்த போட்டியில் கவர்னர் மற்றும் முதல்வர் மு. க. ஸ்டாலின், மத்திய மாநில அமைச்சர்கள், சர்வதேச விளையாட்டு வீரர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த போட்டி தமிழகத்தில் நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. பிரதமர் வருகையால் விமான நிலையம் முதல் நேரு உள் விளையாட்டு அரங்கம் வரை அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை பாதுகாப்பு பணியில் 22 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10,0000 க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
மேலும் சந்தேகபடும் வகையில் யாரேனும் சுற்றினால் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுவார்கள்.மேலும் சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி குறித்து யாரேனும் வாட்ஸ்அப், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களில் பிரதமரை பற்றிய தவறான கருத்துக்களை பதிவு செய்வோர் மற்றும் பகிர்வோர் என அனைத்து நபர்களையும் கண்காணித்து வருகின்றனர். ஏதேனும் தவறான கருத்துக்கள் பதிவு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் தேவையற்ற கருத்துக்களை பதிவிடுவதை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.