தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கவனத்திற்கு – 2ம் கட்ட வகுப்புகள் ஒத்திவைப்பு!
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையில் இன்று நடைபெற இருந்த வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான, இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பயிற்சி:
தமிழகத்தில் கடந்த 2021 அக்டோபர் மாதம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் சிறப்பிக்க நடைபெற்று முடிந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது நகர்புறங்களுகான உள்ளாட்சி தேர்தலை ஜனவரி மாதத்திற்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து விரைவில் தேர்தலை நடத்த திட்டமிட்ட நிலையில் கொரோனா மூன்றாம் அலை காரணமாக தேர்தல் பணிகள் சற்று தாமதமடைந்தது. கடந்த மாதம் சற்று பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் பிப்ரவரி 19ம் தேதி அன்று நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
IPL மெகா ஏலம்: மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் குறிவைக்கும் 3 வீரர்கள் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கான பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எவ்வித காரணங்களும் கூறாமல் பட்டியலில் உள்ள அலுவலர்கள் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியில் அதிக, ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேர்தலுகான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
பிப். 21 முதல் புதிய ஊரடங்கு தளர்வுகள் – எல்லைகள் திறப்பு! வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனுமதி!
இந்த நிலையில் பள்ளிகளில் இன்று மாணவர்களுக்கு முக்கிய தேர்வு நடைபெற உள்ளதால் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையில் இன்று நடைபெற இருந்த இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நாளை(பிப்.10) மாற்றப்பட்டுள்ளது. முதல் கட்ட பயிற்சி வகுப்பு, கடந்த வாரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இறுதிக்கட்ட தேர்தல் வகுப்பு பிப்ரவரி 18ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.