IPL மெகா ஏலம்: மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் குறிவைக்கும் 3 வீரர்கள் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
2022 ஆண்டின் ஐபிஎல் 2022 ஏலம் வருகிற பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கு IPL யில் பங்கேற்கும் 10 அணிகளும் சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டு வருகிறார்கள். சமீபத்தில் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் இறுதி பட்டியலை BCCI வெளியிட்டது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி முக்கியமான 3 தொடக்க வீரர்களை ஏலத்தில் எடுக்க குறிவைத்துள்ளது.
IPL மெகா ஏலம்:
IPL தொடரில் போட்டியிடும் பத்து அணிகள் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளவுள்ளதால், மீதமுள்ள வீரர்களை எந்தெந்த அணிகள் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேபோல கடந்த சில மாதங்களில் பல இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக ஆடி வருவதால், அதில் சில முக்கிய வீரர்களை அணியில் சேர்க்க, அனைத்து அணிகளும் குறி வைக்கும் என்பதால் இரண்டு நாட்களும் ஐபிஎல் ஏலம் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மொத்தம் 1,214 வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்த நிலையில் தற்போது 590 வீரர்கள் கொண்ட இறுதி பட்டியலை BCCI வெளியிட்டுள்ளது.
பிப். 21 முதல் புதிய ஊரடங்கு தளர்வுகள் – எல்லைகள் திறப்பு! வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனுமதி!
2021 ஆண்டு BCCI ஒரு அணி தலா 4 வீரர்களை மட்டும் தக்கவைக்க வேண்டும் என்று அறிவித்தது. அதன்படி 5 முறை IPL கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸும் நான்கு வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டது. ரோஹித் சர்மா 16 கோடிக்கும் ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், கெய்ரோன் பொல்லார்ட் ஆகியோர் முறையே 12 கோடி, 8 கோடி மற்றும் 6 கோடிக்கு தங்கவைக்கப்பட்டனர். இந்த ஆண்டு ஏலத்தில் வீரர்களை எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 48 கோடி ரூபாய்க்கு மீதம் உள்ளது. இதனை தொடர்ந்து வரும் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி முக்கியமான 3 தொடக்க வீரர்களை ஏலத்தில் எடுக்க குறிவைத்துள்ளது.
TCS, Infosys, Wipro, HCL Tech ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவிற்கு வரும் Work From Home?
அதில் கடந்த ஆண்டு டெல்லி அணியின் தொடக்கவீரரான ஷிக்கர் தவான் , இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் மற்றும் ஆஸ்திரேலியா மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மேத்திவ் வேட் ஆகியோர் அதிக தொகைக்கு மும்பை அணிக்கு ஏலம் போவார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு முன் IPL தொடரில் 3 இந்த வீரர்களும் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.