பிப். 21 முதல் புதிய ஊரடங்கு தளர்வுகள் – எல்லைகள் திறப்பு! வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனுமதி!
உலகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதனால் இதனை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முழு ஊரடங்கு
சீனாவில் உருவான கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவ தொடங்கியது. இதனால் தொற்று மேலும் பரவாமல் இருக்க பல்வேறு கட்டுப்பாடுகளை பல்வேறு நாடுகள் அறிவித்து வந்தது. இந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் பரவல் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவ தொடங்கியது. இந்த ஓமைக்ரான் தொற்று இந்தியா, நியூசிலாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் இதனை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.
தமிழக ரேஷன் அட்டைத்தார்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு – 500 கோடி ரூபாய் ஊழல்!
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த நாட்டு எல்லைகள் முழுமையாக மூடப்பட்டது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் குடிமக்கள், புலம் பெயர்ந்தவர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மட்டும் பயணிக்க அனுமதி அளித்தது. இதையடுத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் அனுமதி வழங்க உள்ளதாக ஆலோசனைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு – தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம்!
இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியதாவது, வருகிற பிப்ரவரி 21ம் தேதி முதல் நாட்டின் அனைத்து எல்லைகளும் திறக்கப்பட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் சுற்றுலா பயணிகள் கொரோனாவின் 2 டோஸ் தடுப்பூசியை கட்டாயமாக செலுத்தியிருக்க வேண்டும். இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்தால் ஊரடங்கில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.