தமிழகத்தில் வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம் – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் தேசிய ஊரக வேலை உறுதி தி ட்டத்தில் வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று பல்லடம் வட்டார கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம் :
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஊரக பகுதிகளில் உள்ள ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தது 100 வேலை நாட்களுக்கான வேலை வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிராம புற ஏழை மக்கள் பயன்பெறுகின்றனர். இந்த கொரோனா ஊரடங்கு காலத்திலும் அரசு ஊரக வேலை மூலம் வேலை அளித்து ஊதியம் வழங்கியது. வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
5 ஆண்டுகளில் 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – மாநில அரசு திட்டம்!
தற்போது தமிழகத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கட்டிடங்கள், சாலைகள், சிறு பாலங்கள் கட்டப்படுவது போல் வீடற்ற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தை சேர்த்து செயல்படுத்த வேண்டும் என்று பல்லடம் வட்டார கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
குடிநீர் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் காலி இடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். சிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு நிதி வழங்கப்படாமல் உள்ளது. இதனால் ஏழை மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர், எனவே இந்த நிதியை உடனடியாக வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருப்பூரில் பில்லூர் முதல் எல்லையான காரணம்பேட்டை வரை தனி குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஊராட்சி தலைவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.