5 ஆண்டுகளில் 1 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கம் – மாநில அரசு திட்டம்!
அடுத்து வரும் 5 ஆண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க கர்நாடக திறன் மற்றும் வாழ்வாதார பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது என்று கர்நாடகா மாநில முதல்வர் பி எஸ் எடியூரப்பா இன்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் அறிவிப்பு:
திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் மற்றும் வாழ்வாதாரத் துறை இன்று ஏற்பாடு செய்துள்ள ‘உலக இளைஞர் திறன் தினம்’ ல் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா அவர்கள் கலந்து கொண்டார். அதன்பிறகு, சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் 18-35 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் மனித வளங்கள் உள்ளது. கர்நாடகாவில் 16-35 வயதிற்குள் 2.21 கோடி மக்கள் தொகை உள்ளது. இதனால் உலக அளவிற்கு இளைஞர்களின் திறனை வளர்ப்பதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி மேம்படும் என்று தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கல் – அரசுக்கு உத்தரவு!
மேலும், செப்டம்பர் மாதத்திற்குள் ரூ .4,636.50 கோடி செலவில் 150 அரசு ஐ.டி.ஐ.க்களை மேம்படுத்த டாடா டெக்னாலஜிஸுடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது என்று முதல்வர் அறிவித்தார். திறன் மேம்பாட்டுக்காக அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை பட்டியலிட்ட யெடியூரப்பா, தேசிய ஊரக வாழ்வாதார பிரச்சாரத்தின் கீழ் சமூக முதலீட்டு நிதியமாக 1,93,000 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ .400 கோடியை வெளியிட உள்ளதாக கூறினார்.
TN Job “FB Group” Join Now
இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிப்பதற்காக எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசு முன்னணி நிறுவனங்களுடன் தொடங்கியுள்ளது. மேலும், முதல்வர் எடியூரப்பா மற்றும் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் மற்றும் வாழ்வாதாரத்துறை அமைச்சராக இருக்கும் துணை முதல்வரான சி என் அஸ்வத் நாராயண் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க கர்நாடக திறன் மற்றும் வாழ்வாதார பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் அதன் அறிக்கையை குழு சமர்ப்பிக்கும் என்றும் கூறியுள்ளார்.