தமிழகத்தில் நீட் பயிற்சி வகுப்புகள் நீட்டிப்பு!!
தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
NEET தேர்வு ஒத்திவைப்பு:
இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் தேர்வானது கொரோனா காரணமாக, செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக சென்ற வாரம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும் ஜேஇஇ மெயின் தேர்வுகளும் செப்டம்பர் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீட் பயிற்சி வகுப்புகள் நீட்டிப்பு:
நீட் தேர்வு செப்டம்பர் மாதம் ஒத்திவைக்கப்பட்ட காரணத்தால், தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் வரை நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.