NEET, JEE செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்
இந்தியாவில் கோவிட் -19 நோய் தொற்று அதிகரித்து வருவதால், இந்த ஆண்டிற்குரிய JEE, NEET போன்ற தேர்வுகள் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத காரணத்தாலும், நோய் தொற்று குறையாத காரணத்தாலும் தேர்வுகளை நடத்துவது மத்திய மாநில அரசுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இந்நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தற்போது NEET, JEE மற்றும் செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
புதிய வழிகாட்டு நெறிமுறைகள் :
- தேர்வு நடக்கும் போது மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை கட்டாயம்.
- தேர்வறை கண்காணிப்பாளர்க்கும் உடல்நிலை சான்றிதழ் அவசியம்
- தேர்வு மைய சுவர்கள், கதவுகள், வாயில்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும்.
- புதிய முக கவசங்கள், கையுறைகள் வழங்கப்பட வேண்டும்.