தமிழகத்தின் ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக பல்வேறு தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தமிழக ஆளுநர்:
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி அவர்கள் கடந்த 2021 செப்டம்பர் ஒன்பதாம் தேதி அன்று இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தால் பதவி பிரமாணம் செய்து கொண்டார். தமிழக ஆளுநராக பதவி ஏற்றது முதல் தொடர்ந்து தமிழக அரசு மற்றும் ஆளுநர் தரப்பிற்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. கடந்த இரண்டு முறை சட்டமன்ற கூட்டத் தொடரிலும் ஆளுநர் தனது உரையை முடிக்காமல் அவையில் இருந்து வெளியேறியது சலசலப்பை ஏற்படுத்தியது.
இன்று CSK vs RCB பலப்பரீட்சை – முதல் போட்டியில் யாருக்கு வெற்றி!!
இந்நிலையில் தற்போது தமிழக ஆளுநர் பதவியில் இருந்து திரு ஆர்.என்.ரவி அவர்கள் விலக இருப்பதாகவும் இது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் முன் வராத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.