தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு வீடு வாடகைப்படி நிறுத்தம் – அரசாணை வெளியீடு!
தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் பேறுகால விடுப்பின் போது, வீட்டு வாடகைப்படி கொடுக்கப்படாது என அடிப்படை விதிகளில் சில திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணை வெளியீடு
பொதுவாக மத்திய மற்றும் மாநில அரசுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதிகளவு ஊதியத்துடன் கூடுதல் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அரசுத்துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி, பயணப்படி, வாடகைப்படி, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட கூடுதல் கொடுப்பனவுகள் அளிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசுத்துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பேறு கால விடுப்பு தற்போது 12 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அழகப்பா பல்கலை தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு!
இந்த சலுகைகள் காரணமாக தான் பலரும் அரசு வேலைகளை பெற்றுக்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசுத் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படி குறித்த திருத்தப்பட்ட அடிப்படை விகிதங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ‘தமிழகத்தில் அரசுத்துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு அடிப்படை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.312 அதிகரிப்பு – இன்றைய நிலவரம்!
அந்த வகையில் கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் அரசு ஊழியர்களுக்கு பேறு கால விடுமுறையாக 12 மாதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது 12 மாதம் பேறுகால விடுப்பில் செல்லும் பெண் ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி குறிப்பிட்ட காலங்களுக்கு வழங்கப்படாது’ என பேறுகால விடுப்பு தொடர்பான அடிப்படையில் விதிகளில் சில திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.