தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மிக தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை:
புதிய கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில் தமிழகத்தில் கடந்த ஜூன் 14ம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு நிர்வாகம் மற்றும் மாணவர் சேர்க்கை பணிகள் போன்றவை மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா மற்றும் ஆணையர் நந்தகுமார் அவர்கள் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினர். இதனை தொடர்ந்து தற்போது புதிய உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
30 லட்சம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் – வெளியான தகவல்!
இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகள், முதன்மை கல்வி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அங்கீகாரம் பெறும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆவணங்களை முறையாக சரிபார்த்த பின்பு பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் புதிய பாடப்புத்தகங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைத்து, அதை விநியோகம் செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
மேலும் தமிழக அரசு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை தொடர்ந்து அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. அதிக அளவில் மாணவர்கள் வருகை தருவதால் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றி சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் அதோடு மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வேலைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.