30 லட்சம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் – வெளியான தகவல்!

0
30 லட்சம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் - வெளியான தகவல்!
30 லட்சம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் - வெளியான தகவல்!
30 லட்சம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் – வெளியான தகவல்!

இந்தியாவில் ஐ.டி துறையில் பணியாற்றும் 30 லட்சம் பணியாளர்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக ஐடி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

ஐடி ஊழியர்கள் பணி நீக்கம்:

இந்தியாவில் ஐ.டி துறையில் தானியங்கு தொழில்நுட்பம் அதிகரித்து வருகிறது. இதனால் ஐ.டி ஊழியர்களுக்கு பணி வெகுவாக குறைந்தது வருகிறது. இந்தியாவில் மொத்தம்1.30 கோடி பேர் ஐடி துறையில் பணி செய்கின்றனர். இதற்கிடையில் ரோபோ செயல்முறை ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால் ஐ.டியில் ஊழியர்களின் தேவை குறைந்து வருகிறது.

ஆதார் இணைப்பிற்கு செப்டம்பர் 1 வரை கால அவகாசம் நீட்டிப்பு – வருங்கால வைப்பு நிதி!

இந்த நிலையில் தேவைக்கும் அதிகமாக உள்ள ஊழியர்களை பணி நீக்கம் செய்வது குறித்து ஐ.டி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், டெக் மகிந்திரா மற்றும் பிற முக்கிய நிறுவனங்கள் 30 லட்சம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 25,000 அமெரிக்க டாலர் செலவாகிறது. கூடுதலான ஊழியர்களை பணி நீக்கம் செய்தால் இந்த செலவை குறைக்க முடியும் என ஐ. டி நிறுவனங்கள் கூறுகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

ஐடி துறையில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 30 லட்சம் ஊழியர்கள் வேலை இழப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கினறன. இந்தியாவில் 90 லட்சம் ஐடி ஊழியர்கள் சிறிய நிறுவனங்களிலும், பிபிஓக்களிலும் பணியாற்றி வருகின்றனர். அந்த 90 லட்சம் பேரில் 30 சதவீதம் பேரை வேலையில் இருந்து நீக்க ஐடி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. மேலும் 30 லட்சம் பேரை நீக்கிவிட்டு 7 லட்சம் தானியங்கு தொழில்நுட்பம் கொண்டு வரப்படும் எனவும் கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!