தமிழக அரசு வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு கால அவகாசம் – கோரிக்கை!
தமிழகத்தில் 2014, 2015, 2016 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் ஆர். கணேஷ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
வேலைவாய்ப்பு புதுப்பிப்பு:
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்தவர்கள் அதை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிப்பது அவசியமாகும். தற்போது ஆன்லைன் மூலம் புதுப்பிக்கும் வசதி உள்ளது. இதன் மூலம் வேலை அலுவலகத்திற்கு செல்லாமல் வீட்டிலிருந்தே புதுப்பிக்கலாம். மேலும் கல்வி தகுதிகளையும் பதிவு செய்யலாம். தற்போது நிலவி வரும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் சிரமப்படும் மக்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செய்லபடுத்தப்பட்டு வருகிறது.
OTT ல் வெளியான திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகாது – உரிமையாளர்கள் அதிரடி முடிவு!
தமிழகத்தில் கடந்த 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு அரசு கால அவகாசம் அளித்தது. நேரிலோ அல்லது இணையதள முகவரியிலோ புதுப்பித்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி மேற்குறிப்பிட்ட ஆண்டுகளில் வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்கள் புதுப்பித்து கொண்டனர். தற்போது 2014, 2015, 2016 ஆண்டுகளில் வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் ஆர். கணேஷ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியுள்ளனர். இவர்களை கருத்தில் கொண்டு காங்கிரஸ் உறுப்பினரின் கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி கணேசன் தெரிவித்துள்ளார்.